வெள்ளி, 20 செப்டம்பர், 2019

மறக்கபடும் மனிதர்கள்



நீண்ட உறக்கத்தில் இருந்து  தீடிரென எழுந்தேன்.மணி 7:00 ,உறக்கத்தில் இருந்த மனைவி, குழந்தைகளை எழுப்பாமல் அலுவலகம் கிளம்ப தீர்மானித்தேன்.காலண்டர் டிசம்பர் 23 ,2019 காட்டியது .குழந்தைகள் யாரோ மூன்று மாத தேதியை  கிழித்து  விட்டனர் போல.

அலுவலகத்தை அடைந்தேன் . எனது  இருக்கையில் யாரோ ஒரு  கண்ணாடி அணிந்த  என்னை  விட  5 வயது  சிறிய  இளைஞன் அமர்ந்திருந்தான். நண்பர்கள் யாரும்  என்னோடு பேச முற்படவில்லை.நானும் அமைதியாக இருந்து  என்ன  வித்தியாசமாக நடக்கிறது என்று கவனிக்க  ஆரம்பித்தேன்.

எனது பாஸ் வந்தார், அவனிடம்  நேற்றைய பணிகளை  கேட்டறிந்தார். நான் இல்லாமல் பணிகள் எதுவும் நடக்காது என்று கூறும் பாஸ் , அவனிடம் முன்பை விட பணிகள் சிறப்பாக நடப்பதாக கூறியது ஆச்சரியமாக இருந்தது.அலுவலகத்தில்  என்னோடு உணவருந்தும் எனது நெருங்கிய நண்பர்கள் பலர் அவனோடு எப்போதும் போல அதே மகிழ்ச்சியுடன் உணவருந்தினர்.

சரி  மாலையில் என்னோடு கிரிக்கெட் விளையாடும் நண்பர்களை சந்திக்கலாம்  என்று போனால், அங்கு நான் விளையாடும் ஓப்பனிங் பொசிஸனில் கருப்பாக என்னை  விட உயரம் குறைவான ஒருவன் விளையாடினான், என்னை விட அவன் நன்றாக விளையாடியது எனக்கே தெரிந்தது. நான் இல்லாமல் எனது அணி எளிதில் வெற்றி பெற்றது. எப்போதும் போல் வெற்றி மகிழ்ச்சியில் நண்பர்கள்.

முகநூல்  பக்கம் சென்று பார்த்தால் புதிதாக ஒரு சின்ன பையன் கதை , ஜோக்  எல்லாம் எழுதி இருந்தான் .எனக்கு வழக்கமாக லைக்  போட்டு பாராட்டும் முகநூல் நண்பர்கள் அனைவரும் அவனுக்கும்  லைக் போட்டு  பாராட்டி இருந்தனர்.. உறவினர், நண்பர் whatsapp குரூப்களில் எப்போதும் போல் அரட்டை , வாக்குவாதங்கள் நீண்டு கொண்டு இருந்தது

நான்  சில நிமிடங்கள் " Every Where Iam  completely replaced , How ? என்று யோசித்து கொண்டு இருந்து பிறகு இரவாகி விட்டது என்று வீட்டை நோக்கி சென்றேன் ..கதவு திறந்து இருந்தது .

என்னுடைய  மகள் " அப்பா இன்னைக்கும்  ஊர்லேந்து வர மாட்டாரா?  கேட்கிறாள். கண்ணீரை துடைத்து கொண்டு " இல்லம்மா, அடுத்த வாரம்  வருவார் " என்று சொல்கிறாள் மனைவி.

எனது புகைப்படத்துக்கு முன்பு விளக்கேற்றி வைக்கப்பட்டு இருந்தது . புகைப்படத்தின் கீழ் " தோற்றம்..10.10.1982..மறைவு 18.09.2019 என்று எழுதபட்டு இருந்தது..

என்னது  நான்  இறந்து மூன்று மாதம் ஆகி விட்டதா என்று திடுக்கிட்டு கத்தினேன்...
என்னங்க நடுராத்திரில கத்துறீங்க ? என்று மனைவி கேட்ட போது அனந்த கண்ணீருடன் கனவா ?என்று  கட்டியணைத்து " Now I know the priorities in life? என்றவாறு மீண்டும் உறக்கத்தை தொடர்ந்தேன்.
(Inspired by stories &  events)

திங்கள், 3 டிசம்பர், 2018

டெல்டா மனிதர்களின் வாழக்கையில் கஜா புயலின் பாதிப்பை பற்றிய பதிவு

கற்பனையல்ல ... டெல்டா மனிதர்களின் வாழக்கையில் கஜா புயலின் பாதிப்பை பற்றிய பதிவு.


அன்புள்ள ஆனந்தி ,                                                                             NOV-10 ,2018
            இன்றோடு 14 ஆண்டுகள் ஓடி விட்டது இந்த  அரபு  தேசத்தில்,     26 வயதில் இந்த ஊருக்கு வந்து, இரண்டு  ஆண்டுக்கு ஒரு முறை சில  மாதங்கள் மட்டும் நமது டெல்டா மண்ணில் , நமது  10 ஆண்டு திருமண வாழக்கையில் உன்னோடு  இருந்தது  சில மாதங்களே.
ஆனால் இந்த  14 ஆண்டுகால  உழைப்பில் , வாங்கி  போட்ட நிலத்தில் தென்னை வைத்து காய் காய்க்க ஆரம்பித்து விட்டது.
வாழையும்  ஆண்டு வருமானத்துக்கு ஆகி  விட்டது, இதனுடன் , மனதுக்கு பிடித்த வயலில் இரு போக சாகுபடி நடக்கிறது.  நமக்கும் நமது பிள்ளைக்குமான ஆடம்பரம் இல்லாத  எளிய தேவைகளுக்கு போதுமான வாழ்க்கை நடத்த  வருமானம் வருகிறது.மனம்  நிறைவாக இருக்கிறது. 

  நீ சொன்னது  போல்  40 வயது ஆகும் போது இந்த பாலைவன வாழக்கையை விட்டு விடலாம் , இந்த  முறை விடுமுறை நிரந்தரமானது . இனி பிள்ளைகளை பள்ளிக்கு விடுவது , பாடம்  சொல்லி தருவது, விவசாயம்  என  ஒவ்வரு  நாளும்  இனிமை ,
விட்டு சென்ற வருடங்களை நினைவில் கொள்ளாமல் இனி ஒவ்வரு நாளும் உன்னோடு, 
தீபாவளி, பொங்கல் எல்லாம் நாம் ஒன்றாக கொண்டாடுவோம் .
கேம்ப்  சாப்பாடு இல்லாமல் ,காலை டிபன் முதல்  இரவு உணவு வரைஎல்லாம்  உன் கையில்தான். உறவினர் வீட்டு விசேஷத்திற்கு நீ தனியாக  போக வேண்டியது இல்லை நாம் சேர்ந்து  போகலாம்.

 நாட்களை எண்ணி கொண்டு  இருக்கிறேன் .... விரைவில்  டெல்ட்டாவில் புதிய விடியலை நோக்கி.

 அன்புடன்

மகேந்திரன்.
சோழகன் குடிகாடு , ஒரத்தநாடு .


அன்புள்ள மாமாவுக்கு ,                                                              Nov 17,2018                                       

    நாம்  போடும் கணக்குகள்  ஒன்று என்றால் கடவுள் போடும் கணக்குகள் வேறு மாதிரியாகி   உள்ளது.  முன்தினம் அடித்த கஜா புயல்  நமது கனவுகளை நமது தோட்டத்து தென்னை மரம் போல் வேருடன்  பிடுங்கி  எறிந்து விட்டது.

 வைத்திருந்த 500 தென்னையில் ஏறத்தாழ 450 மரங்களை சாய்த்து விட்டது , பொங்கலுக்கு வெட்ட நினைத்த 2 ஆயிரம் தார்களில்  பெரும்பாலானவை பிடுங்கி எறிந்து விட்டது.
வயற்காடு சம்பா பயிரும் சாய்ந்து விட்டது ...

  வரும் நாட்கள் கடினமாக தான்  இருக்கும் போல் தெரிகிறது .கையிலிருக்கும்  சேமிப்பை வைத்து 4 முதல் 5 மாதம் சமாளித்து விடலாம், நாம் முழுவதும் மீண்டு  எழ சில வருடங்கள் ஆகும் ,
 மாமா வருத்தமாக தான் இருக்கிறது ,  இன்னும் 2 முதல் 5 ஆண்டுகள் நீங்கள் பாலைவன வாழ்க்கையை தொடர்ந்தால் மட்டுமே நாம்  கவுரவமான வாழ்க்கை இங்கு வாழ முடியும்,

 இத்தனை  வருடம் காத்திருந்த நானும் என் பிள்ளைகளும் இன்னும் சில வருடம் காத்து இருக்கிறோம் .

  நமது விடியலுக்கான நாள் தள்ளி போய் இருக்கிறதே தவிர தொலைந்து விடவில்லை .

நம்பிக்கையுடன்

ஆனந்தி
குமார் - இரண்டாம் வகுப்பு
 பூஜா - LKG

by வேலு மருதையன் -

 

வியாழன், 25 அக்டோபர், 2018

TTV- தலைவர்கள் உருவாக்கப் படுவதில்லை

தலைவர்கள்  உருவாக்கப் படுவதில்லை , யார்  கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டு , வெற்றி பெறுகிறார்களோ  அவரே தலைவர்.
தமிழக அரசியலில்  ஜெயலலிதாவோ , கருணாநிதியோ , MGR  தமிழக அரசியலில்  உச்சத்தை  அடைந்தவர்கள்  அனைவரும்  நெருப்பாற்றை நீந்தியே   அடைந்துள்ளனர்.  அதனால்  தான்  25 முதல்  50 ஆண்டுகள்  வரை அந்த உச்சத்தை  தக்க வைக்கவும் முடிந்தது .அதிர்ஷ்டத்தால் அடைந்தால் தக்க  வைப்பது  கடினம் .

 கடந்த  ஒன்றரை  ஆண்டுகளாக  TTV  தினகரன்     பல்வேறு  இன்னல்களையும் , பலமுனை  தாக்குதல்களையும்     தன்னம்பிக்கையுடன் கூடிய ஒரு  புன்னகையுடன்  சந்தித்து தனக்கென  ஒரு  இயக்கத்தையும் , ஒரு  இளைஞர்  கூட்டத்தையும் உருவாக்கி  வைத்து உள்ளார் .

இன்றைய தீர்ப்பும் அவரது (Test for the personality /character) தன்னம்பிக்கைக்கு  ஒரு பலபரிட்ச்சையாகவே  பார்க்கபட்டது  . ஆனாலும் இன்று  அதை  தான்  பின்னடைவாக  பார்க்கவில்லை  என்று நம்பிக்கையுடன்  எதிர்கொண்டார் .
இது அவர் மேலும் தமிழக அரசியலில் உச்சத்தை அடைவார் என்ற  நம்பிக்கை அளிக்கிறது \.


திங்கள், 15 அக்டோபர், 2018

TTV தினகரன் என்னும் டிரம்ப் கார்டு

பாஜக 2ஜி  விடுதலைக்காக  திமுகாவிற்கு கொடுத்திருக்கும் அசைன்மெண்ட் காங்கிரசை கழட்டி  விட்டு  பாராளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும்  என்பது  மட்டுமே .
தேர்தலில்  குறிப்பிட  தக்க வெற்றி  பெற்றால் , வட மாநிலங்களில் குறையும்  எண்ணிக்கைக்கு திமுக வின் நாடாளு மன்ற  உறுப்பினர்களை உபோயோகித்து கொள்ளலாம் .  2ஜி  அப்பீல் ஒன்றும்  இல்லாமல் போய்   மாவட்டங்களில்
கூட்டணி  பேச்சு  வார்த்தையில் 5 க்கும் குறைவான தொகுதிகளை காங்கிரஸ்க்கு  அளித்தால் காங்கிரஸ்  தானாகவே கூட்டணியை விட்டு வெளியேறும்  இது தான்  பிளான் .

 இங்குதான் TTV தினகரன் என்னும் டிரம்ப் கார்டு என்ட்ரி..பாஜக , திமுகா வின் கள்ளத்தனத்தை உணர்ந்த  ராகுல் , TTV யின்  அ ம மு க வுக்கும் கதவுகளை திறந்தே வைத்து இருக்கிறார் .
பாஜகவிற்காக காங்கிரசை பகைத்து  கொண்டால் ,தனித்து நிற்கும் திமுக  டெல்டா  மற்றும்  தென் மாவட்டங்களில் ஊதி தள்ளப்படும் .
அதே நேரத்தில் இந்தியா முழுதும் பாஜக வெற்றி பெற்றால் 2ஜி யில் திமுக கதி அதோ கதி தான். இருதலை கொல்லி எறும்பாக தவித்து இருக்கிறார் ஸ்டாலின்.

வரும் வட  மாநில சட்டசபை காங்கிரஸ் பெறும் வெற்றியை வைத்து தான் திமுகவின் பயணம் அமையும்.

செவ்வாய், 11 செப்டம்பர், 2018

200 ரூபீஸ் உடன்பிறப்பு - ஒரு கலாய் சிறுகதை



ஒரு  டீன்  ஏஜ் பையன் காசோட  அருமை தெரியாம  இருந்தான். அவங்க அப்பாட்ட  போய்  எனக்கு  தினமும் பாக்கெட் மணி  200 ரூபாய் குடுங்கனு  கேட்டான் .

அதுக்கு  அவங்க அப்பா , 200 ரூபாய் அவ்ளோ சாதரணமா  போச்சா ,அதோட மதிப்பு  தெரியுமா உனக்கு ?
   ஒரு திமுக  உடன்பிறப்பு  இணைய தளத்தில்  200   ரூபாய்க்காக எவ்ளோ  கஷ்டப்படறான்னு தெரிஞ்சா  நீ  இப்டி  கேட்க  மாட்ட ?

அவன்  200 ரூபாய்க்காக  கலைஞர் முதல்  நான்காம்  கலைஞர் உதயநிதி மகன்  வரை, 2 டஜன்  குடும்ப  உறுப்பினர் அனைவருக்கும்  முட்டு கொடுக்கணும்.

200 ரூபாய்க்காக , மொத  நாள்  Go back Modi /amit  shaw  ன்னு  ட்ரெண்ட் பண்ணிட்டு , மறுநாள்  தலைமை  நினைவஞ்சலிக்கு அவங்களையே  தலைமையா போட்டா , கொஞ்சம்  கூட வெட்க  படாம  அரசியல் நாகரீகம் ன்னு முட்டு குடுக்கணும்.

200 ரூபாய்க்காக, குடும்பம்  ஒத்துமையா இருந்தா  அஞ்சா நெஞ்சர் ன்னு  சொல்லனும் , சண்ட  வந்தா அராஜகம் பண்றவர் னு சொல்லணும் .
 
மொத நாள்  வைகோவை  துரோகின்னு  ஸ்டேட்டஸ் போட்டு,மறுநாள்  போர்வாள் னு சொல்லணும் .

ஒருநாள் ஈழ தமிழர்  சகோதரன்னு  சொல்லணும் , இன்னொரு  நாள் அவனை தீவிரவாதி னும் சொல்லணும் 

கூட்டணி கட்சின்னு உதவாத  பத்து பேர்  இருப்பாங்க , அவங்களுக்கும்  200 ரூபாய்க்காக ஒரு அடிஷனல்  முட்டு ..

இதெல்லாம்  விட கட்சிக்காரன்  கூட்டத்துல பொண்ணுங்க  இடுப்பை  கிள்ளுவான் , பிரியாணிக்கு பாக்ஸிங் பண்ணுவான்  அந்த  கொடுமையை   எல்லாம்  நியாயபடுத்தனும் .

ஒரு  மனுஷன் 200 ரூபாய்க்காக எப்படி  பாடு  படுறான் பாத்தியா ?

மகன்  " அப்பா  எனக்கு  பணத்தோட அருமை  தெரிஞ்சிடுச்சு , இனிமே நான்  கேட்க மாட்டேன் 


புதன், 1 ஆகஸ்ட், 2018

முல்லா கதையும் , விசாரணை ஆணையமும்

முல்லா கதையும்  ,  விசாரணை ஆணையமும் 

ஒருநாள்  முல்லா  தெரு  விளக்கு  வெளிச்சத்தில்  எதையோ  தேடி  கொண்டு  இருந்தார் . அப்போது  வந்த முல்லாவின்  நண்பர்  "என்ன  தேடுகிறீர்கள்  முல்லா  என்று   கேட்டார். எனது  மோதிரம்  தொலைந்து  விட்டது , அதை  தான்  தேடுகிறேன்  என்றார் . மோதிரம்  இங்குதான்  தொலைந்ததா  என்று   நண்பர் கேட்டதற்கு முல்லா  பக்கத்தில்  உள்ள  இருளில்  தொலைந்தது  ஆனால்  இருளில்  தேட  முடியாது  என்பதால்  பக்கத்தில்  உள்ள  வெளிச்சத்தில்  தேடுகிறேன்  என்றார்.

அதுபோல்  ஜெயலலிதா  மறைவிற்கு  அமைக்கப்பட்ட  விசாரணை  ஆணையம் , போயஸ்  தோட்ட  வேலையாள் , அப்போலோ  ஹாஸ்பிடல் செக்யூரிட்டி என்று  பலரையும் கூப்பிட்டு சசிகலாவிற்கு  எதிராக  வாக்குமூலம்  கிடைக்குமா  என்று முயற்சிக்கிறது.
ஆனால்  அதிகாரங்களை வைத்திருந்த   அப்போதைய  பொறுப்பு  முதல்வர் , மாநில  சுகாதார   துறை  அமைச்சர், AIIMS டாக்டர்கள் , அவர்களை  அனுப்பிய மத்திய  சுகாதார துறை அமைச்சர் , மருத்துவமனையில் வந்து சந்தித்த  அப்போதைய  கவர்னர் , அப்போதைய மத்திய அமைச்சர் தற்போதைய  துணை  குடியரசு  தலைவர்  இவர்களை  விசாரிக்க  வேண்டியதுதானே ?

அதை  விட்டு  வாட்ச்மன்  வேலையாள்  விசாரிப்பது , வெளிச்சத்தில்  தேடிய  முல்லாவின்  கதை போல்  அல்லவா  இருக்கிறது.

அது  என்ன ஜெயலலிதாவிற்கு  ஸ்வீட்  கொடுக்கப்பட்டதா ? என்று ஒரு  கேள்வி.அவர் என்ன  கை  குழந்தையா ? ஜெயலலிதா  ஸ்வீட்  சாப்பிட்டாரா ? என்பது தானே  சரியான   கேள்வியாக இருக்க முடியும்.

ஒவ்வரு  முறையும் ஆணையத்தில்  இருந்து ஊடகத்துக்கு  கசிய  விடப்படும் தகவல் சசிகலா விற்கு  எதிராக  இருக்கிறது ?

முடிவுரை  எழுதி விட்டு  , கதையை  எழுதுகிறதா  ஆணையம் 

வியாழன், 21 ஜூன், 2018

அரசியல் பற்றிய ஒரு புரிதல் (தொடக்க நிலை )


அரசியல்  பற்றிய  ஒரு  புரிதல் (தொடக்க நிலை  )

தற்போதைய  நிலையில் ஒரு அரசியல்  இயக்கம்  வெற்றி  பெற  முதன்மையானவைகள்  .

   முதல் வகை (idealogist  ) :- கொள்கை /.சித்தாந்தம்  விளக்க  கூடியவர்கள், புள்ளி  விவரங்களை  விரல் நுனியில் வைத்து  இருப்பவர்கள் , கொள்கை  விமர்சனக்களுக்கு பதிலடி கொடுப்பவர்கள் ,தேர்தல் அறிக்கை  தயாரிக்க  உதவுவார்கள். தொலைக்காட்சி  விவாதங்களில்  தாக்கத்தை ஏற்படுத்த  கூடியவர்கள் .  மக்கள்  என்னதான்  காசு  குடுத்தாலும் , வாக்களிக்க  ஒரு லாஜிக் எதிர்பார்ப்பார்கள்  அந்த லாஜிக்கை தர  கூடியவர்கள்

 இரண்டாம்  வகை  (Muscle Man ) :- எனப்படும்  பலம் வாய்ந்தவர்கள் ,  ஜாதி  ரீதியாகவோ , பிராந்திய ரீதியாகவோ தொண்டர்   பலம்  உடையவர்கள். கட்சி கூட்டங்கள் , மாநாடுகள், போராட்டம்   போன்றவற்றிக்கு  தொண்டர்களை  திரட்ட  கூடியவர்கள். அமைப்பு  ரீதியாக ஒன்றியம்,முதல்  கிளை கழகம் வரை  தொடர்பு வைத்து  இருப்பவர்கள். ஆட்சிக்கு  வரும்  போது  அவர்களது பிராந்தியத்தில்  கிளை கழகம் வரை  பயனடைவதை  உறுதி  செய்ப்பவர்கள் . இயக்க  கட்டமைப்பை  உறுதி  செய்பவர்கள்.


மூன்றாம் வகை (Pockets ):-  ,கட்சி அதரவு  நிலையில் இருக்கும் மிக  பெரும்  தொழில்  அதிபர்கள் , ஆட்சி  நடக்கும்  போது  பொருளீட்டி  கொண்டு தேவைகளின்  போது  நிதி  தருபவர்கள். அதரவு  ஊடகங்களையும்  நடத்த  கூடியவர்கள்

இதில்  ஒருவரே  இரண்டு அல்லது  மூன்று  வகையில்  இருந்தால்  இன்னும்  சிறப்பு.

தலைவர் :-  மக்களை  ஈர்க்க  கூடியவர் , மேல சொன்ன 3 வகையிலும்  பலம்/அறிவு   வாய்ந்து இருக்க  வேண்டும்  , 3  வகையினரையும் கட்டுப்பாட்டில்  வைத்து  இருக்க  வேண்டும் . இவர்களுக்கான  balance maintain செய்ய வேண்டும் , எந்த  நிலையிலும் மனம்  தளராதவராகவும் ,நம்பி வந்தவர்களை  காப்பாற்ற கூடியவராகவும் இருக்க வேண்டும் ,இதையும்  தாண்டி மக்கள்/தொண்டர்   நலத்தில் இயற்கையாகவே கொஞ்சம்    அக்கறை உள்ளவராகவும்  இருக்க  வேண்டும்.

கள  பணியாளர்கள் :- இயக்கத்தின்  கடைசி  நிலை தொண்டர்கள், தலைவர் மற்றும்  பிராந்திய  தலைவர்கள்  மீது அதீத அன்பு  உடையவர்கள்.  தனது  வாக்கு  மட்டும் இல்லாமல் தன்  பகுதி வாக்காளரை  அழைத்து  வந்து தனது கட்சிக்கு வாக்களிக்க வைக்க கூடியவர்கள்

இன்றைய நிலையில்  இது    எல்லாம்  balanced இருந்தா  இயக்கம்  மக்களை  சென்றடையும் .

மத்தபடி  தகவல்  தொழில்  நுட்ப  பிரிவு  எல்லாம்  தேவைதான் , ஆனா களப் பணியில் இல்லாமல் வெறும்  ஸ்டேட்டஸ் போட்டு  கட்சி  வளரும்னு  நினைச்சா டேட்டா  வேணா  தீரும் , கட்சியெல்லாம்  வளராது.

இது  என்னுடைய  அரசியல்  பற்றிய புரிதல். சரியா? தவறா ? என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்